2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மடி கணினி கையளிக்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஜூன் 19 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா)
சம்மாந்துறை தேசிய பாடசாலையின் பாவனைக்காக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீரின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் கொள்வனவு செய்யப்பட்ட மடி கணினி கையளிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம்.மன்சூர், கணக்காளர் ஏ.எல்.றபீக், ஜனாதிபதி கூட்டிணைப்பு உத்தியோகத்தர் எம்.எம்.ஏ.காதர், பிரதேச சபை உறுப்பினர் ஏ.முகம்மட், சம்மாந்துறை தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் அன்வர் அலி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் கணினியினை சம்மாந்துறை தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் அன்வர் அலியிடம் கையளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .