2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஆளுங் கட்சி மாகாண சபை உறுப்பினர் ஹசன் மௌலவி மு.கா.வில் இணையவுள்ளார்: அப்துல் மஜீத்

Menaka Mookandi   / 2012 ஜூன் 19 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் எஸ்.எல்.எம்.ஹசன் மௌலவி இன்னும் சில தினங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணையவுள்ளார் என்று கிழக்கு மாகாணசபையின் மு.கா. உறுப்பினர் ஏ.எம்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.

மு.காங்கிரஸில் இணைவதற்கான விருப்பத்தினை ஹசன் மௌலவி தன்னிடம் பல தடவை தெரிவித்ததாகவும், இவ்விடயத்தினை மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமிடம் - தான் கூறியதாகவும் மாகாணசபை உறுப்பினர் அப்துல் மஜீத் மேலும் கூறினார்.

அக்கரைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஏ.எல்.தவம் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டமையினை வரவேற்கும் நிகழ்வொன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மு.காங்கிரஸின் அக்கரைப்பற்றுக் காரியாலயத்தில் இடம்பெற்றது.

அக்கரைப்பற்று மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவரும், மு.காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான அஷ்ஷேய்க் எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே – கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மஜீத் மேற்கண்ட விடயத்தினைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்ளூ

அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர், அக்கரைப்பற்று மாநகரசபையின் தேசிய காங்கிரஸ் உறுப்பினர் பதவிகளை வகித்த ஏ.எல். தவம் - மு.காங்கிரசில் இணைந்து கொண்டமையானது சந்தோசம் தருகின்றதொரு விடயமாகும்.

இதோபோன்று – கிழக்கு மாகாணசபையின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினரான ஜவாஹிர் சாலியும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மு.காங்கிரசில் இணைந்துள்ளார்.

இன்னும் சில நாட்களில் திருகோணமலை மாவட்டத்தின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முண்னணியின் கிழக்கு மாகாணசபை உறுப்பிர் ஹசன் மௌலவியும் மு.காங்கிரசில் இணையவுள்ளார்.

இது தொடர்பாக ஹசன் மௌலவி என்னுடன் பேசினார். அப்போது அவர் கூறுகையில்ளூ 'நான் முஸ்லிம் காங்கிரசில் இருந்தவன். மீண்டும் அந்தக் கட்சிக்கு வரப்போகிறேன். மு.கா. தலைமையிடம் இது தொடர்பில் கேட்டுச் சொல்லுங்கள்' என்றார்.

ஹசன் மௌலவியின் விருப்பத்தினை மு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீமிடம் தெரிவித்தேன். 'மு.காங்கிரசில் எல்லோரும் இணைய முடியும். அதற்கு தடையெதுவும் இல்லை' என்று தலைவர் ஹக்கீம் கூறினார்.

இதை ஹசன் மௌலவியிடம் தெரிவித்தேன். இன்னும் சில தினங்களில் அவர் எமது கட்சியில் இணையவுள்ளார் என்றார்.

இந் நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர், கல்முனை மாநகரசபை மேயர் எம்.எஸ். சிறாஸ், அக்கரைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் ஐ.எல்.ஏ. ஹக்கீம், மு.காங்கிரசின் ஸ்தாபகச் செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் உள்ளிட்ட பலர் பிரமுகர்களாகக் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • janoovar Tuesday, 19 June 2012 12:23 PM

    வேறொரு கட்சியில் இருந்திருந்தால் உங்கள் முகவரி நிலைத்திருக்கும் போயியும் போய் இதுலையா?

    Reply : 0       0

    Munawer Tuesday, 19 June 2012 03:09 PM

    எல்லோருக்கும் முகவரி கொடுத்தது என்பதை மறக்க வேண்டாம்.

    Reply : 0       0

    siraj Tuesday, 19 June 2012 06:19 PM

    முகவரி தெரியாத சிலருக்கு முகவரி காட்டிய முஸ்லீம் காங்கிரஸை மறந்து கதை சொல்வது வேதனையா இருக்கு.

    Reply : 0       0

    suhaib Wednesday, 20 June 2012 05:00 AM

    யார் சேர்ந்தாலும் பரவாயில்லை தயவுசெய்து பதவிக்காக சண்டை போட்டு கட்சியைப் பலவீனப்படுத்த வேண்டாம்.

    Reply : 0       0

    nawshad Wednesday, 20 June 2012 08:02 AM

    இல்லாட்டி சட்டிக்குள்ள குதிரை ஓட்ட சொல்றியெலா?

    Reply : 0       0

    AKP ting ting Thursday, 19 July 2012 02:58 AM

    தவம் சேகுவிடம் இருந்து முதல்வர் ஆஹல. அதாவிடம் இருந்து வந்தவர். அவருக்கு முகவரி கொடுத்தது அதா. காங்கிரசுக்கு அக்கரைபற்றில் இடமில்லை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .