2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கஞ்சாவை எடுத்துச்சென்ற குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2012 ஜூன் 21 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


கஞ்சாவை எடுத்துச்சென்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 4 சந்தேக நபர்களை எதிர்வரும் ஜுலை மாதம் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 கிலோ கஞ்சாவை எடுத்துச்சென்ற குற்றச்சாட்டின் பேரில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட இச்சந்தேக நபர்கள், அன்றையதினம் அம்பாறை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

சியம்பலாண்டுவ பிரதேசத்திலிருந்து கஞ்சாவை எடுத்துச்சென்றபோது கல்மடுவ பிரதேசத்தில் கஞ்சாவுடன் இச்சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இவர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .