2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஜெய்கா வீதி நிர்மாண வேலைகளில் பொருளாதார அமைச்சு தலையிட முடியாது: உதுமாபெல்பை

Menaka Mookandi   / 2012 ஜூன் 25 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால், ஜப்பான் அரசாங்கத்தின் ஜெய்கா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் வீதி நிர்மாண வேலைகளில் பொருளாதாரா அபிவிருத்தி அமைச்சு தலையிடவோ, அல்லது அந்த வேலைகளை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் கொண்டு வரவோ முடியாது என கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையில் - தான் பதவி வகிக்கும் அமைச்சுக்களின் மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் வகையில் கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை - ஊடகவியலாளர் சந்திப்பொன்றினை நேற்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை கூட்டுறவுசங்கக் கட்டிடத்தில் நடத்தினார்.

இதன்போது, அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்திப் பணிகள் அனைத்தும் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் கடந்த வியாழக்கிழமை முதல் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி குறித்து ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் உதுமாலெப்பை மேற்கண்ட விடயத்தினை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவதுளூ

'கிழக்கு மாகாண அமைச்சுக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் விசேட நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. உதாரணமாக - நீர்ப்பாசனம், வீதி அபிவிருத்திகளுக்கு நிதிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேவேளை, ஜப்பான் நாட்டு அரசாங்கம் தனது ஜெய்கா திட்டத்தின் கீழ் வீதிகளை அமைப்பதற்காக இலங்கையின் மத்திய அரசாங்கத்துக்கு ஒரு தொகை நிதியினைக் கடனாக வழங்கியுள்ளது. அந்தக் கடனை அப்படியே கிழக்கு மகாணசபைக்கு மத்திய அரசாங்கம் கொடுத்துள்ளது.

இந்த ஜெய்கா திட்டத்தின் கீழ் ஏரத்தாள 305 கிலோமீற்றர் வீதிகள் கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்படவுள்ளன. இவ்வாறு கிழக்கு மாகாணத்துக்குக் கிடைத்த நிதியினை எமது மாகாணத்தின் மூன்று மாவட்டங்களுக்கும் நாம் பிரித்துக் கொடுத்திருக்கின்றோம். 

அந்தவகையில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை தொகுதியில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் மொத்தமாக 674 மில்லியன் ரூபாய் நிதி - வீதிகள் நிர்மாணிப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

மேற்படி 674 மில்லியன் ரூபாவும், கல்முனை முஸ்லிம் பிரிவுக்கு 122 மில்லியன், கல்முனை தமிழ் பிரிவுக்கு 75 மில்லியன், நற்பிட்டிமுனைக்கு 200 மில்லியன், மருதமுனைக்கு 110 மில்லியன், சாய்ந்தமருதுக்கு 167 மில்லியன் எனப் பங்கீடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.

You May Also Like

  Comments - 0

  • meenavan Monday, 25 June 2012 05:45 PM

    அமைச்சரே? நிதி பங்கீடு சன அடர்த்தியை வைத்து பங்கிடப்படுகிறதா அல்லது அரசியல் செல்வாக்கின் அடிப்படை பின்பற்றப்படுகிறதா? அந்த வகையில் கல்முனை முஸ்லிம் பகுதிக்கு நிதி வழங்களில் தரவின்படி அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

    Reply : 0       0

    ibnuaboo Tuesday, 26 June 2012 05:41 AM

    பத்திரிகையாளரின் கேள்விக்கு நன்றி. அதனால்தான் ஜெய்காவின் உதவி பற்றி அமைச்சர் விபரமாக அரிய முடிந்தது. இப்போ வீதியை விட வடிகால்கள்தான் முக்கியம். அதையும் செய்யுங்கள்.

    Reply : 0       0

    pasha Tuesday, 26 June 2012 07:37 AM

    கல்முனை முஸ்லிம் பிரிவு அபிவிருத்திகள் கௌரவ பாராளுமன்ற உறுப்பிபினரின் அனுமதிக்கு உட்பட்டது வேறு யாரும் தலை இட முடியாது.

    Reply : 0       0

    majeed Tuesday, 26 June 2012 08:12 AM

    அமைச்சரே! மருதமுனை வேறு கல்முனை முஸ்லிம் பகுதி வேறு அல்ல.

    Reply : 0       0

    suhaib Tuesday, 26 June 2012 10:47 AM

    பங்கீடு செய்யப்பட்டுள்ளதைப் பார்த்தால் பொருளாதாரா அபிவிருத்தி அமைச்சு பாரமெடுத்தால் நல்லது போலிருக்கிறதே.

    Reply : 0       0

    Hassan Thursday, 28 June 2012 04:43 AM

    அமைச்சர் உதுமாலெப்பையின் பாரிய சேவைகள் தொடர வாழ்த்துக்கள். குறை கூறுவது ஒரு நோய்.
    -ஹசன்.

    Reply : 0       0

    jsu Friday, 29 June 2012 05:54 AM

    ஹசன் சகோதரர், குறை கூறுவது ஒரு நோய் எனத் தெரிவித்து ம‌ற்றவர்களைக் குறை கூறுகின்றார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .