2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சுற்றாடல் முன்னோடி செயலமர்வு

Kogilavani   / 2012 ஜூன் 27 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சாய்ந்தமருது கோட்ட மட்ட பாடசாலை சுற்றாடல் முன்னோடி ஆசிரயர்களுக்கான செயலமர்வொன்று நேற்று செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது அல் ஹிலால் வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது கோட்டத்தில் மாணவர்கள் மத்தியில் சுற்றாடல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் இச்செலயமர்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

கோட்டமட்ட சுற்றாடல் முன்னோடி உதவி ஆணையாளர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் தலைமையில் இடம்பெற்ற இச் செயலமர்வில் சாய்ந்தமருது கோட்டத்திற்குட்பட்ட 9 பாடசாலைகளையும் சேர்ந்த சுற்றாடல் முன்னோடி பொறுப்பாசிரியர்கள், சாய்ந்தமருது கோட்ட கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம்.முபாறக் மௌலவி, கல்முனை வலய சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் எம்.ரீ.நௌபல் அலி, வன இலாகா அதிகாரி எஸ்.எம்.எம்.சபீக், சாய்ந்தமருது பிரதேச செயலக சுற்றாடல் உத்தியோஸ்தர் எஸ்.எம்.றியாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செயலமர்வின் இறுதியில் பாடசாலை வளாகத்தினுள் மரக்கன்றுகளும் நடப்பட்டன.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .