2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வீடுகள், ஆலயங்களிலுள்ள தண்ணீர் மோட்டர்கள் மற்றும் ஒலிபெருக்கிகளை கொள்ளையடித்தவர் கைது

Super User   / 2012 ஜூலை 05 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

நாவிதன்வெளி பிரதேசத்தில் வீடுகள் மற்றும் ஆலயங்களிலுள்ள தண்ணீர் மோட்டர்கள் மற்றும் ஒலிபெருக்கிகளை நீண்ட நாட்களாக கொள்ளையடிது வந்த 28 வயதுடைய  கொள்ளையரை நேற்று புதன்கிழமை மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதன்போது, கொள்ளையடித்து மறைத்து வைக்கப்பட்ட பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளதாக சவளக்கடை பொலிசார் தெரிவித்தனர்.
 
சவளக்கடை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள அரிசி ஆலையொன்றில் கடந்த ஜுன் மாதம் 29ஆம் திகதி தண்ணீர் மோட்டர் ஒன்று திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிசார் மேற்கொண்டு வந்த விசாரணையின் போது, நேற்று புதன்கிழமை மாலை சொறிக்கல்முனை பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் வைத்து குறித்த கொள்ளையரை பொலிசார் கைது செய்தனர்

கைது செய்யப்பட்டவர் நீண்ட நாடகளாக இப்பிரதேசத்தில் இவ்வாறான உபகரணங்களை கொள்ளையடித்து வந்துள்ளதாக பொலிஸாரின்  ஆரம்ப விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன் அரிசி ஆலையில் திருடப்பட்ட  தண்ணீர் மோட்டர் மற்றும் வேறு இரு தண்ணீர் மோட்டார்கள். மல்வத்தை ஆலயத்தின் ஒலிபெருக்கி உபகரணங்கள் உட்பட பல பொருட்கள் நிலத்தில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது என தெரிவித்த பொலிஸார் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பான விசாரணைகளை சவளக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .