2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

யானை தாக்கியதில் விவசாயி பலி

Kogilavani   / 2012 ஜூலை 06 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                           (எஸ்.மாறன்)
அக்கரைப்பற்று மெட்டையாறு வயல் பிரதேசத்தில் காட்டுயானை தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

மெட்டையாறு வயல் பிரதேசத்தில் வேளாண்மை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரு விவசாயிகள் வயல் வெளிக்குள் வந்த யானையைக் கண்டு ஓடியுள்ளதுடன் இவர்களில் ஓருவர் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.

அக்கரைப்பற்று கோளாவில் 3ஆம் பிரிவு, விசவைத்தியர் வீதியைச் சேர்ந்த ஒருபிள்ளையின் தந்தையான க.கணகசிங்கம் என்பவரே யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது என திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .