2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கான பாராட்டு, கல்வியலாளர்கள் கௌரவிப்பு நிகழ்வு

Kogilavani   / 2012 ஜூலை 07 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சி.அன்சார்)

தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கான பாராட்டு விழாவும், கல்வியியலாளர்கள் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று வெள்ளிக்கிழமை மாலை சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் இடம்பெற்றது.

தென்கிழக்குப் பல்கலைக்கழக இளநிலை பட்டதாரிகள், சம்மாந்துறை ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது.
சம்மாந்துறை இளநிலைப் பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் எம்.எச்.எம்.அம்ஜத்கான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் தலைவர் ஐ.ஏ.ஜப்பார், சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சுர், இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தகனக ஆகியோர்கள் அதிதிகளாக கலந்து கொண்டனர்கள்.

இதன்போது, தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறைத் தலைவர் கலாநிதி றமீஸ் அப்துல்லாஹ், வர்த்தக முகாமைத்துவ பீட பீடாதிபதி சரீனா யு.எம்.ஏ.கபுர், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.ஐ.எம்.கலீல்,   கணக்கியல் நிதியியல் பிரிவுத் தலைவர் ஏ.எம்.ஐனுல் ஜாரியா, நூலகர் எம்.எம்.றிபாவுடீன், தொழில் வழிகாட்டல் பிரிவுப் பணிப்பாளர் திருமதி சல்பியா யு.ஏ.ஜலீல், உதவிப் பதிவாளர் ஏ.ஆர்.எம்.மாஹீர்,  கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பிரதிப் பதிவாளர் ஏ.தையுப் ஆகியோர் பாரட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இவ்வைபவத்தில் மேன்மை எனும் நூலும் வெளியிடப்பட்டது.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .