2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மாடு அறுத்த ஐவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஜூலை 08 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் எருமை மாடுகளை இறைச்சிக்காக அறுத்த குற்றச்சாட்டின் பேரில்  5 பேர் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை  கைதுசெய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர். 

அத்துடன், எருமை மாட்டிறைச்சியையும் உயிருடனான எருமை மாடுகளும்; வனவிலங்கு அதிகாரிகளினால்; கைப்பற்றப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

வனஇலாகா திணைக்களத்திற்கு கிடைத்த தகவலையடுத்து  அக்கரைப்பற்று இறைச்சி அறுக்கும் இடத்திற்கு சென்ற வனவிலங்கு அதிகாரிகள்  3 எருமை மாடுகளை இறைச்சிக்காக அறுத்துக்கொண்டிருந்த 5 பேரை கைதுசெய்ததுடன், அறுக்கப்பட்ட மாட்டிறைச்சியையும் உயிருடன் 2 எருமை மாடுகளையும் கைப்பற்றியதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .