2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

நெற்பயிர்களிடையே களைகளின் பெருக்கத்தால் விவசாயிகள் கவலை

Kogilavani   / 2012 ஜூலை 09 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)

அம்பாறை மாவட்டத்தில் நெற்பயிர்களிடையே களைகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, நெற்பயிர்களிடையே மஞ்சட்கோரை எனும் புல்லினம் தீவிரமாக வளர்ந்து வருவதனால், நெற்பயிர்களின் வளர்ச்சி குன்றிக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மஞ்சட்கோரை எனும் இந்தப் புல்லினத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, குறித்த புல் வகைக்கென சிபாரிசு செய்யப்பட்டுள்ள களைநாசினிகளை தாம் பயன்படுத்தி வருகின்றபோதும், அதற்குரிய பயன்கள் கிடைக்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக, மனித வலுவினைப் பயன்படுத்தி நெற் பயிர்களிடையே வளர்ந்துள்ள மஞ்சட்கோரைகளை அகற்றும் நடவடிக்கையில் விவசாயிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.

இருந்தபோதும், மஞ்சட்கோரை எனும் புல்லினத்தின் அதீத பெருக்கத்தினைக் கட்டுப்படுத்த முடியாதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நெல் வயல்களில் தற்போது - மஞ்சட்கோரை, நரி மாறத்து மற்றும் குதிரைவாற் புல் போன்ற களைகள் பெருகிக் காணப்படுகின்றன.

ஆயினும், மஞ்சட்கோரையின் வளர்ச்சி மிக அதிகமாக காணப்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

கடந்த போகங்களிலும், இவ்வாறான புல்லினங்களின் அதீத வளர்ச்சியின் காரணமாக விவசாயிகள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியிருந்தையும் இங்கு குறிப்பிடத்தக்கது.                   



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .