2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

நிகழ்ச்சி திட்டங்களை மேற்கொள்ள கல்முனை மாநகர சபையினால்அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு நிதி வழங்கல்

Super User   / 2012 ஜூலை 09 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


சீடோ மற்றும் நேசம் ஆகிய அரச சார்பற்ற நிறுவனங்களுடன் கல்முனை மாநகர சபை அண்மையில் கைச்சாத்திட்ட ஒப்பந்தங்களிற்கு இணங்க குறித்த நிறுவனங்களுக்கு தலா 250,000 ரூபா காசோலையினை வழங்கும் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை மேயர் செயலகத்தில் இடம்பெற்றது.

உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சின் அனுசரனையுடனும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதி உதவியுடனும் ஆசிய மன்றம் உள்ளூராட்சி மன்றங்களில் நடைமுறைப்படுத்தி வரும் உள்ளூர் பொருளாதார ஆட்சி செயற்திட்டத்தின் கீழ்  கல்முனை மாநகர சபையின் வருமானத்தை அதிகரிப்பதற்கான செயல்திட்டத்திற்கு  குறித்த நிறுவனங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி நிதி ஒதுக்கீட்டின் முதற்கட்ட நிதியாகவே மேற்குறித்த நிதி வழங்கப்பட்டது. குறித்த இரண்டு நிறுவனங்களும் மக்கள் மத்தியில் வரி மற்றும் வியாபார அனுமதிப்பத்திரம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை மேற்கொள்வதுடன் புள்ளிவிபரங்களை திரட்டி மாநகர சபைக்கு வழங்குவதன் மூலம் மாநகர சபையின் வருமானத்தை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அத்தோடு வர்த்தக சங்கங்கள், பொதுமக்கள் ஆகியோருடன் மாநகர சபையுடனான தொடர்பினை அதிகரிப்பதற்கும் பங்களிப்புச் செய்யவுள்ளனர். கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி ஆசிய பவுன்டேசன் நிகழ்ச்சி திட்ட உத்தியோகத்தர் வலீத் மற்றும் வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .