2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அனர்த்த முகாமைத்துவ குழுக்கான கருத்தரங்கு

Kogilavani   / 2012 ஜூலை 10 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)

அம்பாறை மாவட்ட செயலகத்தின் அனுசரணையோடு கல்முனை பிரதேச  செயலக ரீதியாக இயங்கும் அனர்த்த முகாமைத்துவ குழுக்கான அறிவூட்டலும், தயார்படுத்தலுக்குமான கருத்தரங்கு நேற்று திங்கட்கிழமை பிரதேசசெயலக மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் இலங்கையில் இடம்பெறக்கூடிய அனர்த்தங்கள் தொடர்பாகவும், அதிலிருந்து மக்களை பாதுகாத்துக்கொள்ளும் பொறிமுறைகள் தொடர்பாகவும், அனர்த்தம் ஒன்று ஏற்பட்டபின் எவ்வாறு குழுக்களாக பிரிந்து பணியாற்றுதல் என்பது தொடர்பாகவும் அறிவூட்டப்பட்டது.

கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வளவாளர்களாக அனர்த்த முகாமைத்துவ திணைக்களத்தின் அம்பாறை மாவட்டத்திற்கான உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.சியாத், கல்முனை பிராந்திய இராணுவப் பொறுப்பதிகாரி மேஜர் டபிள்யு.ஏ.எஸ்.பிரசாந்த், அம்பாறை மாவட்ட கரையோரப் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.ஜெசூர் ஆகியோர்கள் கலந்துகொண்டதுடன் பங்குபற்றுனர்களாக பிரதேச செயலக கள உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவக்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .