2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வலிந்துதவு சமுக சேவை அமைப்புக்களின் நிர்வாகிகளுக்கான கலந்துரையாடல்

Kogilavani   / 2012 ஜூலை 12 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                

(ஏ.ஜே.எம்.ஹனீபா)
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிற்குட்;பட்ட வலிந்துதவு சமூக சேவை அமைப்புக்களின் நிர்வாகிகளுக்கான கலந்துரையாடல் நிகழ்வு நேற்று சம்மாந்துறைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.அன்சார், நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஐ.ஏ.றஹீம் உட்பட சமூக சேவை அமைப்புக்களின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் பதிவு செய்யப்பட்டுள்ள 160க்கு மேற்பட்ட வலிந்துதவு சமூக சேவை அமைப்புக்களில் பெரும்பாலான அமைப்புக்களின் வருடாந்த செயற்பாட்டறிக்கைகள் பிரதேச செயலகங்களுக்கு ஒப்படைக்கப்படாமல் அவர்களுடைய காரியாலய விலாசங்கள்  இல்லாமல் பிரதேச செயலகங்களினால் அனுப்பப்படும் கடிதங்கள் மீண்டும் பிரதேச செயலகங்களுக்கு திரும்பி வருகின்றது.

இவ்வாறான நிலமையினை ஆராயும் முன்னோடி கலந்துரையாடலாக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளதாகவும் செயற்படாதுள்ள அமைப்புக்களை இனங்காணுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0

  • Kamil Thursday, 12 July 2012 10:20 AM

    வலிந்துதவு சமுக சேவை அமைப்புக்கள் எனும் சொல்லை விட தன்னார்வ தொண்டர் நிறுவனம் என்பது மிக பொருத்தமானது !!!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .