2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தேசத்துக்கு மகுடம் கண்காட்சியை முன்னிட்டு நடமாடும் சேவை

Super User   / 2012 ஜூலை 12 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


அம்பாறை மாவட்டத்தில் நடைபெறவள்ள தேசத்துக்கு மகுடம் (தயட்ட கிருல) வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட முன்னோடி இரண்டாம் கட்ட நடமாடும் சேவை இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல்.தௌபீக் ,உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ. அப்துல் லத்தீப், மாவட்ட பதிவாளர் சீ.எம்.எம்.சத்தார்  உட்பட பிரதேச செயலகத்தின் சகல பிரிவுகளினதும் கிராம உத்தியோகத்தர்களினதும் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

இன்றைய தினம் சம்மாந்துறை – 01.02,03,04,05,06,07,08, தமிழ் பிரிவு – 01,02,03,04, மட்டக்களப்பு தரவை – 01,02. ஆகிய பிரிவுகளுக்கான நடமாடும் சேவை சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .