2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸற்குள் பிளவு எனும் செய்திகளில் உண்மையில்லை: இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்ப

Super User   / 2012 ஜூலை 15 , மு.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் அஸீஸ், எஸ்.எம்.எம்.றம்ஸான்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து செயலாளர் ஹசன் அலி வெளியேறத் தயாராகி வருகின்றனர் எனும் செய்திகளில் உண்மையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.

இது மாற்றுக் கட்சியினரால் திட்டமிட்டு பரப்பபட்டு வருகின்ற வெறும் வதந்தியே எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அரசுடன் இணைந்து போட்டியிடுவது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் மேற்கொண்ட தீர்மானம் காரணமாக கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி அவர்கள் தலைமையில் கட்சி முக்கியஸ்தர்கள் சிலர் அதிருப்தியுற்று கட்சியில் இருந்து வெளியேறத் தயாராகி வருகின்றனர் எனும் செய்திகளில் உண்மையில்லை.

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்று கட்சியின் அதியுயர் பீடம் பலமுறை கூடி ஆராய்ந்தது. இது தொடர்பில் கட்சி தலைவர் ரவூப் ஹக்கீம் ஜனாதிபதியுடனும் அரச உயர் மட்டத்தினருடனும் பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி, முஸ்லிம் சமூகத்தினதும் கட்சியினதும் நலன்களைக் கருத்திற் கொண்டு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டு அரச தரப்புடன் இணைந்து போட்டியிடலாம் என்கின்ற தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

ஜனநாயக ரீதியிலான ஒரு கட்சி என்ற அடிப்படையில் உயர் பீடத்தினர் மத்தியில் மாற்றுக் கருத்துகளும் இருந்து வந்தன. எவ்வாறாயினும் வெள்ளிக்கிழமை இரவு தலைவர் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற உயர் பீடக் கூட்டத்தில் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டு அரச தரப்புடன் இணைந்து போட்டியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதில் சிலருக்கு உடன்பாடு இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் அது பெரியளவில் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கவில்லை. குறிப்பாக எமது செயலாளர் நாயகம் ஹசன் அலி தலைமையில் கட்சி முக்கியஸ்தர்கள் சிலர் இம்முடிவினை எதிர்த்து மாற்று நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாகவும் அவர்கள் கட்சியில் இருந்து வெளியேற போவதாகவும் வெளிவந்துள்ள தகவல்களில் எவ்வித உண்மையுமில்லை.

எமது கட்சிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் எதிரணியினரால் திட்டமிட்டு பரப்பபட்டு வருகின்ற வதந்தி தொடர்பில் செயலாளர் நாயகம் ஹசன் அலியை நான் சனிக்கிழமை இரவு சந்தித்து கலந்துரையாடினேன். இதன்போது அவர் எத்தகைய மாற்று நடவடிக்கைகளிலும் ஈடுபடும் எண்ணம் கொண்டிருக்கவில்லை. சுகவீனம் காரணமாகவே  தாருஸ்ஸலாம் செல்லாமல்  தான் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாக அவர் என்னிடம் தெரிவித்தார்.

ஆனால் எமது கட்சிக்குள் நிலவும் மாற்றுக் கருத்துகளை பூதாகரமாக வெளிக்காட்டி எதிரணியினர் அரசியல் லாபம் தேட முற்படுகின்றனர். அதன் வெளிப்பாடே இந்த வதந்தியாகும். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் கட்சிகள் எதுவும் செய்யாத - அவர்களால் செய்ய முடியாத சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஒன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமின் சாணக்கியத்தினால் சாதித்துக் காட்டியிருப்பதை பொறுக்க முடியாத மாற்று முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் தமது பலவீனத்தை மூடி மறைப்பதற்காக எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதாக புரளிகளைக் கிளப்பி விட்டுள்ளனர்.

எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்வதற்கு ஜனாதிபதி முன்வருவார் என்றோ அம்பாறை மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் மட்டக்களப்பில் 3 ஆஆசனங்களையும் திருமலையில் 3 ஆஆசனங்களையும் முஸ்லிம் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்வார் என்றோ கனவிலும் நினைத்திராத அமைச்சர்கள் அதாவுல்லா மற்றும் றிசாத் பதியுதீன் போன்றோருக்கு தலைவர் ரவூப் ஹக்கீமின் சானக்கியமிக்க செயற்பாடு பேரிடியைக் கொடுத்துள்ளது.

மு.கா.வின் இந்த அரசியல் புரட்கியைத் தாங்கிக் கொள்ள முடியாத இவர்கள் அவற்றை முறியடிக்க மேற்கொண்ட அனைத்து முயற்சிகளிலும் தோல்வியுற்ற நிலையிலேயே தமது இறுதி ஆயுதமாக முஸ்லிம் காங்கிரஸ் பிளவுபட்டிருப்பதாக  வதந்தியைக் கிளப்பிஇ மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முற்பட்டுள்ளனர்.                         

உண்மையில் எமது கட்சிக்குள் எந்த பிரச்சினையும் இல்லை. பிளவுக்கான வாய்ப்பும் இல்லை என்பதுடன் முஸ்லிம் சமூகத்தின் பேரியக்கமான இந்த கட்சி பிளவுபடுவதற்கு எமது செயலாளர் நாயகம் ஹசன் அலி ஒருபோதும் துணை போக மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகின்றேன்" என்றார்.


You May Also Like

  Comments - 0

  • ஊாப்பற்றான் Sunday, 15 July 2012 08:42 AM

    கட்சியையும், தலைமைத்துவத்தினையும் நேசிக்கின்ற பாதுகாக்கின்ற கட்சி போராளிகள் செய்யணே்டியவை இதுதான். கட்சிக்கெதிராக கட்சியை அழிக்கவேண்டுமென்று கங்கனம் கட்டித்திரகின்றவர்களின் பொய்யான வதந்திகளுக்கு சாட்டையடி கொடுக்கவேண்டியது காலத்தின் தேவை. சேர் உங்களுக்கு எதிர்காலம் வளம்பெற வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    Kanavaan Sunday, 15 July 2012 04:37 PM

    அப்ப, முதலமைச்சர் தேவையில்லை என்டு விட்டுவிட்டீர்க என்டு சொல்லுறீங்க. சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்.

    Reply : 0       0

    meenavan Sunday, 15 July 2012 04:51 PM

    கட்சிக்குள் எந்த வித பிரச்சினை இல்லை என்று நீங்கள் கூறினாலும்,நெருப்பில்லாமல் புகை எழாது என்பதில் உடன்படுவீர்கள் தானே?

    Reply : 0       0

    rizad Monday, 16 July 2012 03:31 AM

    இம்முறை மக்கள் உங்களுக்கு நல்ல ஒரு முடிவை தாருங்கள்.

    Reply : 0       0

    Masha Tuesday, 17 July 2012 07:10 AM

    உங்களின் துடிப்பான கட்சி முன்னேற்றத்திற்கும் விசுவாசத்துக்கும் ஒரு மாகாண அமைச்சாராக்கி பார்க்க வேண்டுமென்பதே எங்கள் அவா. மாஷா அல்லாஹ்.

    Reply : 0       0

    தென்கிழக்கு பட்டதாரி Tuesday, 17 July 2012 07:35 AM

    இவர்கள் எதுவானாலும் செய்யட்டும், உங்களைப் போன்ற திறமையானவர்கள் இந்த மாகாண சபை ஆட்சியை கைப்பற்ற வேண்டும். மறைந்த மானிதர் அஸ்ரபின் பக்கபலத்தில் அன்று நீ போரட்டத்தை தலைமை தாங்கி நடாத்தி பெற்றெடுத்த தென்கிழக்கு பல்கலையின் முதல் தொகுதி பட்டதாரி. இது எனது கருத்தல்ல. அன்று அந்தப் போராட்டத்தில் கைகோர்த்து நின்ற சகல பட்டதாரிகளின் ஆசை.

    Reply : 0       0

    samalfasi Wednesday, 18 July 2012 04:09 AM

    .....இவர்கள் எதுவானாலும் செய்யட்டும்,......அப்படியா ?????, இவர் யார்? இந்தக்கட்சியில் என்னவாக இருக்கிறார், இந்தக்கட்சிக்காக எப்படி , என்னனென்ன வேலையெல்லாம் செய்தார், செய்து கொண்டிருகிறார், இவருக்கும் இந்தக்கட்சிக்கும் என்ன பங்கு இருக்கிறது என்ரெல்லாம் தெரிஞ்சிதானா பேசுறிங்க...??? இவர் கட்சிக்காக தான் இப்போதும் கூட சிந்திச்சிக் கொண்டிருகிறார், சேர்,,,அத்தோட இவர் இந்த மாதிரி முடிவெடுக்கும் அளவுக்கு இடம் வைத்த தலைவர் அவருக்கும் எங்களது கண்டனத்தை பதிவு செய்கின்ரோம், இது தொடர்பாக தலைவர் விரைந்து முடிவெடுகாமைக்கு எங்களது அதிருப்தியையும் கூறிக்கொள்கின்றோம்.

    Reply : 0       0

    reemaj Wednesday, 18 July 2012 04:16 AM

    எப்ப நொமினேசன்?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .