2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

அம்பாறையில் 'ரட்டவிருவோ' அமைப்பு அங்குரார்ப்பணம்

Menaka Mookandi   / 2012 ஜூலை 18 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எம்.சி.அன்சார்)

அம்பாறை மாவட்டத்திலிருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுச் சென்றவர்களின் குடும்பத்தினரின் நன்மை கருதி 'ரட்டவிருவோ' எனும் அமைப்பு அம்பாறை ஸ்தாபிக்கப்படவுள்ளது.

இதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊக்குவிப்பு நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா நேற்று செவ்வாய்க்கிழமை அம்பாறைக்கு விஜயம் செய்தார்.

இங்கு விஜயம் செய்த அமைச்சர் டிலான் பெரேரா அம்பாறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில், அம்பாறை பிரதேச செயலாளர் பண்டார மாப்பா தலைமையில் நடைபெற்ற ரட்ட விருவோ கூட்டத்தில் கலந்து கொண்டு இத்திட்டம் அதன் நன்மை என்பன பற்றி அதிகாரிகளுக்கு விளக்கமளித்தார்.

இக்கூட்டத்தில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் அமல் சேமாலங்காதின, பிரதேச செயலாளர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு உயர் அதிகாரிகள், சமூர்த்தி முகாமையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது இந்த அமைப்பு தொடர்பாக அறிமுகம் செய்யப்பட்டதுடன், மாவட்ட மட்டத்தில் பிரதேச செயலக ரீதியாக இவ்வமைப்பு தொடர்பாக விழிப்புட்டல் செய்வதற்காக அறிவுரைகளும், ஆலோசனைகளும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .