2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

மான் இறைச்சி வைத்திருந்த இருவருக்கு அபராதம்

Menaka Mookandi   / 2012 ஜூலை 24 , பி.ப. 12:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை, மத்தியமுகாம் பிரதேசத்தில் மான் இறைச்சி வைத்திருந்த இருவருக்கு 30 ஆயிரம் ரூபாவை தண்டப்பணமாக செலுத்துமாறு அம்பாறை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி செல்வி எம்.எஸ்.பிரிங்கி உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து மத்தியமுகாம் 18ஆம்
கொலனிப் பிரதேசத்தில் உள்ள இரு வீடுகளில் சோதனையிட்ட பொலிஸார் குளிர்சாதனைப் பெட்டிகளில் தலா 2 கிலோ வீதம் 4 கிலோ மான் இறைச்சியை கைப்பற்றியுள்ளனர்.

இதனையடுத்து இருவர் கைது செய்யப்பட்டதுடன் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போதே நீதவான் அபராதம் விதிக்க தீர்ப்பளித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .