2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பயிர்களுக்கான சிகிச்சை தொடர்பில் அறிவூட்டும் கூட்டம்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 25 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)


அம்பாறை, அக்கரைப்பற்று கிழக்கு விவசாயப் பிரிவின் கீழுள்ள விவசாயிகளுக்கு பயிர்களுக்கான சிகிச்சை  தொடர்பாக அறிவூட்டும் கூட்டம் ஆலையடிவேம்பு விவசாய சங்கத்தின் காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களம் பயிர்ச் செய்கைகளுக்கு ஏற்படும் நோய்களுக்கான பயிர்ச் சிகிச்சையளிக்கும் திட்டத்தின் கீழ் இக்கூட்டத்தை நடத்தியது.

பயிர்களுக்கு ஏற்படும் நோய்களுக்கு பயிர்ச் செய்கை வைத்தியரிடம் ஆலோசனை பெற வேண்டுமெனவும் கடைகளிலுள்ள மருந்துகளை பாவிப்பதை தவிர்க்குமாறும் விவசாயிகளுக்கு அறிவூட்டப்பட்டன. பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய்களுக்கான சிகிச்சையையும் ஆரம்பித்து வைத்தனர்.

இதில் அக்கரைப்பற்று கிழக்கு விவசாயப் பிரிவு விவசாய திணைக்கள போதனாசிரியர் தர்ஷப்னி, வலய விவசாய திணைக்கள உத்தியோகத்தர் எம்.பி.எம்.இர்ஷக்த்,  திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .