2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

Super User   / 2012 ஜூலை 25 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில்  சாய்ந்தமருது  அல்-ஹிலால் வித்தியாலய மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.

நெல்சிப் திட்டத்தின் மூலமும் கல்முனை மாநகர சபையினாலும் சாய்ந்தமருது பிரதேசத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியினை எவ்வாறான அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கு பயன்படுத்துவது  தொடர்பான ஆலோசனையினை இக்கூட்டத்தில் கலந்துகொண்டோரிடமிருந்து மேயரினால் கோரப்பட்டது.

டின் மீன் தாயாரிக்கும் தொழிற்சாலை, தோணாவின் இருமருங்கிலும் அணைகள் அமைத்தல், தாமரை குளத்தினை பூங்காவனமாக மாற்றுதல், வொலிவேரியன் கிராமத்தையும் சாய்ந்தமருதையும் இணைக்கின்ற இரண்டு பெரும் பாலங்களுக்கிடையில் சிறிய பாலங்களை அமைத்தல், கலாச்சார மண்டபம் அமைத்தல், மீன் சந்தை அமைத்தல், நவீன வசதிகளைக் கொண்ட பொது நூலகம் அமைத்தல், கோட்டக் கல்வி அலுவலகம் அமைத்தல்,  இடங்களை அடையாளம் கண்டு குப்பைத் தொட்டிகளை அமைத்தல் போன்ற வேலைத்திட்டங்கள் இதன்போது முன்மொழியப்பட்டன.

இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஐ.எம்.பிர்தௌஸ், ஏ.நிசார்டீன், சாய்ந்தமருது கோட்ட கல்வி அதிகாரி ஐ.எல்.ஏ.றகீம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • kulathooran Wednesday, 25 July 2012 12:14 PM

    சாய்ந்தமருது அபிவிருத்தி எனும் போது அதன் முதல் பங்களிப்பாளர் அரச உயர் அதிகாரியான பிரதேச செயலாளர் இருக்கவேண்டும் அவருக்கே அங்கு வாழ் மக்களது அத்தியாவசிய தேவை,அவசர தேவை பற்றிய தகவல்கள் அதிகம் தெரியும்.

    Reply : 0       0

    uthuman Wednesday, 25 July 2012 02:36 PM

    கௌரவ மேயர் அவர்களே! உங்களது சிந்தனை மிக அத்தியவசியமானவை. எதையும் துணிந்து செய்ய முன்வாருங்கள். மக்கள் எதையும் பல நோக்கம் கொண்டு பார்த்தாலும் பின்னர் சரியானது என பேசுவார்கள்.

    Reply : 0       0

    riyas Thursday, 26 July 2012 10:11 AM

    சாய்ந்தமருது பிரதேச செயலாளர் இல்லாம சாய்ந்தமருது அபிவிருத்தி கூட்டமா?

    Reply : 0       0

    Maruthooraan Friday, 27 July 2012 05:36 AM

    இது மட்டுப்படுத்தப்பட்ட ஒரு சிலரை அழைத்து நடத்திய கூட்டமா?

    Reply : 0       0

    ஊர்ப்பற்றான் Friday, 27 July 2012 06:57 AM

    நெல்சிப் தயட்ட கிருள பணம் அரசாங்கம் எமது மக்களுக்காக வழங்கியது. இதனை சரியாக செய்யுங்கோ. நீங்க என்ன கூட்டம் போட்டாலும் இன்றைக்கு ஊரின் தன்மானத்தை காப்பவர் பிரதேச செயலாளர் ஏன் அவரை அழைப்பதற்கு மறுக்கின்றீர்கள் ?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .