2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தேசிய காங்கிரஸின் மாவட்டக் குழுக் கூட்டம்

Kogilavani   / 2012 ஜூலை 29 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)
தேசிய காங்கிரஸின் மாவட்டக் குழுக் கூட்டம் நேற்று சனிக்கிழமை மாலை அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்டல் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தேசிய காங்கிரஸின் தேசிய தலைவரும் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சருமான  ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட கிழக்க மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களான முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர், ஜே.எம்.சுபைர்ஹாஜி, சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் உட்பட அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களையும் சேர்ந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது, உரையாற்றிய அமைச்சர் அதாவுல்லா,

தேசிய காங்கிரஸின் இதயசுத்தியான தேர்தல் வியூகத்தின் மூலம் தேசிய காங்கிரஸின் நான்கு வேட்பாளர்களின் வெற்றியோடு அம்பாரை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்தர கூட்டமைப்பு அதிக ஆசனங்களைக் கைப்பற்றும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் அமைச்சர் அதாவுல்லாவினால், நடைபெறவுள்ள கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தேசிய காங்கிரஸின் நான்கு வேட்பாளர்களுக்கும் எவ்வாறு வாக்குகளை அளிப்பது என்பது தொடர்பான வலயங்கள் பிரிக்கப்பட்டு அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களையும் சேர்ந்த மாவட்ட செயற்குழு உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட ஆதரவாளர்கள் பலர் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஏ.எல்.அனீஸ் தலைமையில் தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்டனர்.

இவ்வாறு இணைந்துகொண்டவர்களை கட்சியின் தேசிய தலைவர் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா வரவேற்றதுடன் இவர்களுக்கு கட்சி அங்கத்துவம் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களாக இருந்து அண்மையில் தேசிய காங்கிரஸில் இணைந்து கொண்ட யூ.எல்.எம்.உவைஸ் தேசிய காங்கிரஸின் கிழக்கு மாகாண அமைப்பாளராகவும், சட்டத்தரணி எம்.எம்.பஹ்ஜி கிழக்கு மாகாண கொள்கை பரப்புச் செயலாளராகவும் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம்.அதவுல்லாவினால் நியமிக்கப்பட்டனர்.








You May Also Like

  Comments - 0

  • imran Sunday, 29 July 2012 06:55 AM

    அதாவுல்லாவுக்கு கோவிந்தாதான்!

    Reply : 0       0

    najeem Sunday, 29 July 2012 03:27 PM

    வெற்றி நிச்சயம் மாசா அல்லாஹ்.

    Reply : 0       0

    j.tariq Sunday, 29 July 2012 04:52 PM

    வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    abdula Monday, 30 July 2012 05:01 AM

    யாருக்கு

    Reply : 0       0

    ibnuaboo Monday, 30 July 2012 06:20 AM

    அட்டாளைச்சேனையில் தேசிய காங்கிரசுக்கு ஆதரவு அதிகரித்தால் அதன் வெற்றி உறுதி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .