2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஸ்ரீ.மு.காவின் மக்கள் சந்திப்பு

Kogilavani   / 2012 ஜூலை 29 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)

தெஹியத்தக்கண்டி, இஹலகம, மற்றும் மாவனகம ஆகிய பகுதிகளில் மக்கள் சந்திப்பொன்றை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான றவூப் ஹக்கீம் நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொண்டார்.

இந்நிகழ்வில் எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடும் சிங்கள வேட்பாளர் தொடர்பான கருத்துக்களையும், மக்கள் குறைகளையும் மக்களிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான றவூப் ஹக்கீம் கேட்டறிந்துகொண்டார்.

இச்சந்திப்பில் கல்முனை மாநகர சபை உறுப்பினரும், இளைஞர் காங்கிரஸின் கல்முனை அமைப்பாளருமான ஏ.எம்.பறக்கத்துல்லாஹ், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ.பஸீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0

  • pothumahan Sunday, 29 July 2012 05:53 PM

    இவ்வளவு நாளும் இவர் எங்கு இருந்தார்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .