2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தின் எல்லைகள் சுவீகரிக்கப்படுவதை நிறுத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான், அப்துல் அஸிஸ்)


கல்முனை அனைத்து விளையாட்டுக் கழகங்களின் சம்மேளனம் கல்முனை மாநகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை இன்று வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகையின் பின்னர் இன்று ஒழுங்கு செய்திருந்தது.

கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தை சூழவுள்ளவர்களால் மைதானத்தின் எல்லைகள் சுவீகரிக்கப்பட்டு வருகின்றமையை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு கோரியும் மைதானத்தின் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறும் கோரி இவ்வார்ப்பட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் இருந்து ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஆரம்பிக்கப்பட்டு கல்முனை மாநகர சபை வரை தொடர்ந்தது.

மாநகரசபை அலுவலகத்தில் வைத்து கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலியிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .