2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 07 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை, கல்முனை பிரதேசத்தில் மாட்டு இறைச்சியை விற்பனை செய்வதற்காக கடைக்கு எடுத்துச்சென்றவரிடம் 1,000  ரூபா இலஞ்சம் வாங்கியதாக கூறப்படும்  பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர்  இன்று செவ்வாய்க்கிழமை காலை இறைச்சிக் கடைகாரர்களினால் மடக்கிப்பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
 
நற்பிட்டிமுனையில் வெட்டப்பட்ட மாட்டு இறைச்சியை  கல்முனையில் விற்பனை செய்வதற்காக இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் முச்சக்கரவண்டியில் ஒருவர் எடுத்துச்சென்றதாகவும் இதன்போது கல்முனை பாடசாலை ஒன்றில் காவல் கடமையில் இருந்த மேற்படி பொலிஸ் கான்ஸ்டபிள் இவ்வாறு இறைச்சியை எடுத்துவரமுடியாது என அச்சுறுத்திவிட்டு 10,000 ரூபா தருமாறு கேட்டுக்கொண்டதாகவும் பின்னர்
இறைச்சியை எடுத்துச்சென்றவர் 1,000 ரூபாவை வழங்கியதாகவும் கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில்,  இறைச்சிக் கடைக்கு தாமதமாகி வந்ததற்கான காரணத்தை இறைச்சிக்கடை முதலாளி வினவியபோது, மேற்படி பொலிஸ் கான்ஸ்டபிள் 1,000 ரூபாவை இலஞ்சமாக பெற்ற சம்பவத்தை இறைச்சியை எடுத்துச்சென்றவர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து இறைச்சிக்கடைக்காரர்கள், இலஞ்சம் பெற்றுக்கொண்டதாகத் கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளை  மடக்கிபிடித்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் ஒப்படைத்ததாகவும் பொலிஸார் கூறினர்.

மேற்படி பொலிஸ் கான்ஸ்டபிள் இலஞ்சமாகப் பெற்ற 1,000 ரூபாவை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .