2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

பர்மிய முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக ஜும்ஆ தொழுகையின் பின்னர் துஆ பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டுகோள்

Super User   / 2012 ஓகஸ்ட் 07 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனச்சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ள பர்மிய முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக சகல பள்ளிவாசல்களிலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் துஆ பிரார்த்தனை மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையிடம் கிழக்கிலங்கை முஸ்லிம் இளைஞர் முன்னணி (இம்யா) அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

கிழக்கிலங்கை முஸ்லிம் இளைஞர் முன்னணி விடுத்துள்ள அவசர வேண்டுகோளில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"அல்லாஹ்வையும் ரஸுலையும் ஈமான் கொண்டவர்கள் என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் உலகின் எப்பாகத்தில் வாழ்ந்தாலும் அவர்கள் எமது இஸ்லாமிய சகோதரர்கள். அந்த வகையில் பர்மாவில் வாழும் முஸ்லிம்கள் மிகவுமொரு துர்பாக்கிய சூழலுக்குள் நசுக்கப்பட்டுள்ளார்கள்.

நூற்றுக்கணக்கானோர் நெருப்புக் இரையாக்கப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடு வாசலைவிட்டு  அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இன்னும் எத்தனையோ சம்பங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. சர்வதேச ஊடகங்களும் சர்வதேச சமூகமும் உறங்கி கொண்டிருக்கின்றன நிலையில் ஏன் நம் நாட்டில் வாழுகின்ற எத்தனையொ முஸ்லிம் சகோதரர்களும் அறியாத நிலையிலேயே நிலைமையுள்ளது.

உயிருக்கு பிச்சை கேட்டும் நிலையில் இரத்தக கண்ணீரோடு புனித ரமழான் மாதத்தில் இன்னல்களுக்குள்ளாகியுள்ள பர்மிய முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் சகல பள்ளிவாசல்களிலும் துஆ பிரர்த்தனை மேற்கொள்ள உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு" அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையிடம் கிழக்கிலங்கை முஸ்லிம் இளைஞர் முன்னணி விடுத்துள்ள அவசர வேண்டுகோளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .