2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

எந்த மதஸ்தலத்தையும் உடைக்க அனுமதிக்க முடியாது: கல்முனை விகாராதிபதி

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 11 , மு.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(அப்துல் அஸீஸ்)

'எந்த மதஸ்தலங்களையும் உடைப்பதை நாங்கள் அனுமதிக்க முடியாது. கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் எனக்கு மிகவும் வேதனையளிக்கின்றன. இந்த நாட்டில் வாழ்கின்ற சகல மக்களுக்கும் சகல உரிமைகளும் இருக்கின்றன. பெரும்பான்மை சிறுபான்மை என்றில்லாது இந்த நாட்டில் எல்லோரும் வாழ வேண்டும்'  என கல்முனை நகர பௌத்த விகாரையின் விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரோ குறிப்பிட்டார்.

நேற்று மாலை கல்முனை பொலிஸாரினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டே அவர் இவ்வாறு கூறினார்.

கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்தன் நானயக்கார தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உட்பட பொலிஸ் உயர் அதிகாரிகள், நீதித்துறை சார் உயர் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், அரச திணைக்கள அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0

  • A.Riyal Saturday, 11 August 2012 10:14 AM

    நோன்பு வந்தது எல்லொருக்கும் நல்லதாப் போச்சு..

    Reply : 0       0

    shan Saturday, 11 August 2012 02:01 PM

    அப்ப முன்பு உடைக்கப்பட்ட பள்ளிகளின் காரண கர்தாக்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்களா? இனி இது போன்று நடக்காமல் இருக்க சட்டம் வருமா?

    Reply : 0       0

    nallavan Thursday, 23 August 2012 01:35 PM

    ரொம்ப நன்றி. இத கொஞ்சம் உரத்து சொல்லுங்கோ..........

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .