2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

காரைத்தீவில் மக்கள் சந்திப்பு

Kogilavani   / 2015 பெப்ரவரி 22 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எஸ்.எம்.முஜாஹித்


நீர்ப்பாசன மற்றும் விவசாய பிரதி அமைச்சர் டாக்டர் அனோமா கமகே, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே ஆகியோர் சனிக்கிழமை (21) காரைதீவுக்கு விஜயம் மேற்கொண்டனர்.


இதன்போது காரைதீவு பிரதேசத்திலுள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சிகைளை ஆராயுமுகமாக ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பிலும் இவர்கள் கலந்துகொண்டனர்.


100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பிரதேசத்திலுள்ள பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பிரதேச அபிவிருத்தி, சுயதொழில், இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்களை பெற்றுக் கொடுத்தல் என்பன தொடர்பாகவும் இங்கு ஆராயப்பட்டது.  


காரைதீவு நந்தவன வாசிகசாலை வளாகத்தில் காரைதீவு பிரதேச ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் ரி.சுரேஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அரசியல் தலைவர்கள், பிரதேசத்திலுள்ள இளைஞர்கள், யுவதிகள், பொதுக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X