2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

கஞ்சா வைத்திருந்தவர்களுக்கு அபராதம்

Princiya Dixci   / 2015 மார்ச் 03 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூவரில், ஒருவருக்கு ரூபாய் 12 ஆயிரமும் மற்றைய இரு நபர்களுக்கும் தலா 7,500 ரூபாய் அபராதம் அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.எம்.பஸீல், செவ்வாய்க்கிழமை (03) விதித்தார்.

அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது மேற்படி மூன்று நபர்களும் திங்கட்கிழமை (02) கைதுசெய்யப்பட்டனர்.

குறித்த நபர்களை, இன்று செவ்வாய்க்கிழமை (03) அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோதே மேற்படி அபராதத்தை செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X