2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

சக்தி சமூக முன்னேற்ற கழகத்தின் 14ஆவது ஆண்டு நிறைவு விழா

Sudharshini   / 2015 மார்ச் 04 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்,ஏ.ஜே.எம்.ஹனீபா

காரைதீவு சக்தி சமூக முன்னேற்ற சங்கத்தின் 14ஆவது ஆண்டு நிறைவு விழா காரைதீவு ஆறாம் பிரிவு பல்தேவைக் கட்டட மண்டபத்தில் செவ்வாய்கிழமை (03) நடைபெற்றது.

சக்தி சமூக முன்னேற்ற சங்கத்தின் தலைவர் கண்ணப்பன் சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் வை.கோபிகாந்த் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது பாலர் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் பாலர் பாடசாலைக்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதேவேளை, சங்கத்துக்கான நிரந்தரக் காரியாலயத்தினை நிர்மாணித்துத் தருமாறு கோரி, சங்க பிரதிநிதிகளினால் காரைதீவு பிரதேச சபை தவிசாளரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ரீ.கலையரசனின் பிரத்தியோக செயலாளர் எஸ்.புவிராஜ், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.பாஸ்கரன், கிராம சேவை உத்தியோகத்தர்களான செல்வி. வி.சுபாஜினி, எஸ்.ஜெயசுந்தரம், சக்தி சமூக முன்னேற்ற சங்கத்தின் செயலாளர் ரீ.கோபிநாத், சங்கத்தின் உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X