2025 ஒக்டோபர் 04, சனிக்கிழமை

புதிய அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்றார்

Thipaan   / 2015 மார்ச் 23 , பி.ப. 01:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை மாவட்ட செயலகத்தின் புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள துசித பி.வணிகசூரிய, இன்று திங்கட்கிழமை (23) தனது கடமைகளை  உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கேகாலை மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி வந்த இவர், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக கடiமாயற்றி வந்த நீல்த அல்விஸ், மாத்தளை மாவட்ட அரசாங்க அதிபராக இடமாற்றப்பட்டதையடுத்து அவ்வெற்றிடத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக கடமைப் பொறுப்பேற்ற அரசாங்க அதிபரை, மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் வரவேற்றனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X