Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 மார்ச் 24 , பி.ப. 01:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.ஏ. தாஜகான்
கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு போஷணை உணவுப்பொதிகள் வழங்கும் நிகழ்வு பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் இன்று (24) நடைபெற்றது.
அரசின் 100 நாட்கள் வேலைத்திட்டத்தின் கீழ் சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வு, சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.சமீம் தலைமையில் இடம்பெற்றது.
பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய எல்லைக்குட்பட்ட கர்ப்பிணித்தாய்மார், பாலூட்டும் தாய்மார்கள் உட்பட 50 பேருக்கு போஷணை உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இப்போசனைப் பொதியில் கௌப்பி, பருப்பு, கடலை, சோயா, டின்மீன், சிவப்பு அரிசி, நெத்தலி என்பன பொதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தககது.
இப் போசனைப் பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில், கல்முனைப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் டாக்டர் ஏ.அலாவுதீன், கல்முனைப்பிராந்திய தாய் சேய் நல வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எம்.பசால், பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.முசர்ரத், பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எம்.இஸ்ஸதீன், பொத்துவில் பொலிஸ் பரிசோதகர் காமினி, சுகாதாரப்பரிசோதகர்கள், சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
17 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago