2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

நிபந்தனையை மீறி மணல் ஏற்றியவர் கைது

Sudharshini   / 2015 மே 31 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம் பிதேசத்தில் அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி, உழவு இயந்திரத்தின் இழுவைப் பெட்டியில் ஆற்று மணல் ஏற்றிய சந்தேக நபரை அக்கரைப்பற்று பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை (31) கைது செய்துள்ளனர்.

அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, பொலிஸ் சாஜன் யூ.எல்.எஸ்.ஆப்தீன் தலைமையிலான குழுவிர் குறித்த இடத்துக்கு சென்று சந்தேக நபரை கைதுசெய்ததோடு உழவ இயந்திரத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபர் அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவரை திங்கட்கிழமை (01) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X