Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Sudharshini / 2015 ஜூன் 02 , மு.ப. 09:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.ஸ்.எம். ஹனீபா
நாட்டில் ஆரோக்கியமான சிறந்த அறிவுத் திறனுடைய பிரைஜைகளை உருவாக்குவதற்கு போசாக்கு நிறைந்த உணவுகளை பிள்ளைகளுக்கு வழங்க வேண்டுமென அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர். ஏ.எல். அலாவுதீன் தெரிவித்தார்.
தேசிய உணவு போசாக்கு மாதத்தினை முன்னிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் குடும்ப சுகாதார பணியகமும் இணைந்து ஏற்பாடு செய்த தாய் சேய் போசாக்கு உணவு தொடர்பான விழிப்பூட்டல் கருத்தரங்கும் போசக்குணவு கண்காட்சியும் திங்கட்கிழமை (01) தீகவாபி பல்தேவைக் கட்டடத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து அவர் உரையாற்றுகையில்,
ஆரோக்கியமான சமூதாயத்தை உருவாக்குவதன் மூலம் நாட்டில் ஆரோக்கியமான சமூகம் உருவாகும். நாம் எப்போதும் எமக்குத் தேவையான உணவு வகைகளை உண்பதற்கு பழகிக்கொள்ள வேண்டும்.
கேடான உணவுகளை உண்பதன் மூலம் நாம் சிறந்த சுகதேகிகளாக வாழ முடியாத நிலைக்கு தள்ளப்படுவதோடு மற்றவர்களுக்கும் பெரும் சுமையை ஏற்படுத்த கூடியவர்களாக ஆகிவிடுவோம்.
பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு உணவகங்களில் தயாரிக்கப்பட்ட உணவுகளை வழங்காமல் எமது வீட்டுத் தோட்டத்திலிருந்து பெற்றுக்கொண்ட மரக்கரிகளை கொண்டு போசாக்கான உணவுகளை காலை உணவாக வழங்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பிள்ளை பாடசாலையில் ஆரோக்கியமான பிள்ளையாக காணப்படும்.
நாட்டில் சிறந்த சமூதாயத்தை உருவாக்குவதற்கு நாம் எல்லோரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்வில் தாய் சேய் சுகாதார வைத்திதயதிகாரி டாக்டர் எம்.ஏ.எசீ.எம். பஸான், சுகாதார மருத்துவ தாதிகள், தாய் சேய் மருத்துவ அதிகாரிகள், குடும்பத் தலைவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago