2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

அஞ்சல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் சங்கத்தின் வருடாந்த மாநாடு

Princiya Dixci   / 2015 ஜூன் 07 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

தொழிற் சங்கங்கள், சார்ந்த திணைக்களத்தின் வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபர் வி. விவேகானந்தலிங்கம், இன்று ஞாயிற்றுக்கிழமை (07) தெரிவித்தார்.

அஞ்சல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் சங்கத்தின் 08ஆவது வருடாந்த மாநாடும் பொதுக் கூட்டமும் தலைவர் வை.எம்.என்.எஸ். பண்டார தலைமையில் மாளிகைக்காடு பிஸ்மில்லா விடுதியில் இன்று நடைபெற்றது. 

இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையற்றுகையிலேயே இவர் இவ்வாறு கூறினார்.

'தொழிற் சங்கங்கள் எப்போதும் அரசியல் பின்னணியில் இயங்கக் கூடாது. முற்போக்குத் தன்மையுடன் இயங்கினால்தான் வலுவான தொழிற் சங்கமாக இயங்க முடியும். தொழிற் சங்கங்கள் வெறுமென போராட்டங்களையும் வேறு விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்குமானால் அவை ஒரு வலுவான சங்கமாக அமையாது. எப்போதும் நல்லவைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதோடு தீயவைகளை எதிர்த்துப் போராட வேண்டும்' என அவர் தெரிவித்தார். 

'அஞ்சல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் சங்கம், ஒரு முன்மாதிரியாக செயற்படுவதையிட்டு நான் பாராட்டுகின்றேன். அஞ்சல் திணைக்களத்துக்கு இத்தொழிற் சங்கம் வழிகாட்டியாக செயற்படும் என்பதில் ஐயமில்லை. தபால் திணைக்களம் நவீனமயப்படுத்தப்பட்டு புதிய பரிணாமத்துடன் தொழிநுட்ப ரீதியில் மக்களுக்கு பயன்தரக் கூடிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அதற்கு நாமும் ஒத்துழைப்பு வழங்கி மிகவும் சிறந்த முறையில் அவ்வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அப்போதுதான் தபால் திணைக்களம் அதன் இலக்கை அடைவதோடு மக்களுக்கான சேவையையும் முன்னெடுத்து செல்லும்' என்று அவர் மேலும் தெரிவித்தார். 

அக்கரைப்பற்று, அம்பாறை பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் ஆர்.எம். ரூபசுந்தரபண்டா, அஞ்சல் திணைக்கள கிழக்கு மாகாண நிர்வாக உத்தியோகஸ்தர் எம்.தம்பிஐயா ஆகியோர் இந்நிகழ்வில் விசேட அதிதிகளாக கலந்துகொண்டனர்.

2015ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டுக்கான புதிய செயற்குழு உறுப்பினர்களும் இதன்போது தெரிவுசெய்யப்பட்டதுடன் அஞ்சல் உத்தியோகஸ்தர் சங்கத்தின் செய்திப் பத்திரிகையும் வெளியீட்டு வைக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X