2025 ஜூன் 30, திங்கட்கிழமை

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Thipaan   / 2015 ஜூன் 13 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

அம்பாறை, பாலமுனை அல்-மத்ரஸதுர் றஹ்மானிய்யா குர்ஆன் மத்ரசாவில் அல்குர்ஆன் தஜ்வீத் ஓதற்கலை பயிற்சியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பாலமுனை அல்-ஈமாய்யா அரபுக்கல்லூரி பிரதான மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (12) மாலை இடம்பெற்றது.

இந்நிகழ்வு, மத்ரசாவின் தலைவரும் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப்பணிப்பாளருமான ஏ.சாகுல் ஹமீட் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மட்டகளப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா பிரதம அதிதியாகவும், சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி ஏ.எல.ஏ.கபூர், உதவிக்கல்விப்பணிப்பாளர் பி.எம்.அபுல்ஹஸன், ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் பாலமுனை ஜீம்ஆப்பள்ளிவாசல் தலைவர் யு.எல்.அபூபக்கர், பாலமுனை மின்ஹாஜ் மகாவித்தியாலய அதிபர் எஸ்.எம்.எம்.ஹனிபா உட்பட பெற்றோர்கள், மாணவர்கள், மத்ரசாவின் நிர்வாகிகள் உட்பட் பலர் கலந்து கொண்டனர்.

அல்மதரசதுர் றஹ்மானிய்யாவில் அல்குர்ஆனை பூர்த்தி செய்த மாணவர்கள் இந்நிகழ்வில் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X