2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சம்மாந்துறையில் நவீன வசதிகளுடன் பிரதேச அபிவிருத்தி வங்கிக் கிளை திறப்பு

Sudharshini   / 2015 ஜூன் 15 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையில் நவீன வசதிகளுடனான பிரதேச அபிவிருத்தி வங்கிக் கிளை திறப்பு விழா இன்று (15) திங்கட்கிழமை சர்வமத ஆராதனைகளுடன் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

பிரதேச அபிவிருத்தி வங்கியின் சம்மாந்துறைக் கிளை முகாமையாளர் ஏ.எம்.ஹம்ஷா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதீதியாக பிரதேச அபிவிருத்தி வங்கியின் தலைவர் பிரசன்ன பிரேமரத்ன கலந்துகொண்டு வங்கிக் கிளையினை திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், கௌரவ அதீதிகளாக பிரதேச அபிவிருத்தி வங்கியின் பொது முகாமையாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரீ.ஏ.ஆரியபால, சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், சம்மாந்துறை பிரதேச சபையின் விஷேட ஆணையாளர் ஏ.ஏ.சலீம், சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X