Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூன் 17 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
நிந்தவூர் அட்டப்பள்ளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார்.
அம்பாறை, ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான ஏ.எம்.சரீப்டீன் (வயது 52) எனும் பொலிஸ் அதிகாரியே உயிரிழந்தவராவார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
மட்டக்களப்பு பொலஸ் நிலையத்தில் கடமையாற்றும் இவர், செவ்வாய்க்கிழமை (16) தனது கடமை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, நிந்தவூர் அட்டப்பள்ளம் பகுதியில் வைத்து துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்துள்ளார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பொலிஸ் அதிகாரி, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
6 minute ago
15 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
33 minute ago