2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

இலவச குழாய் நீர் வழங்கும் நிகழ்வு

Sudharshini   / 2015 ஜூன் 17 , மு.ப. 06:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா

சம்மாந்துறை சமூக நல மேம்பாட்டு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறைப் பிரதேசத்தை சேர்ந்த 101 வறிய சமூர்த்தி நிவாரணம் பெறுகின்ற குடும்பங்களுக்கு, இலவச குழாய் நீர் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (15) சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெற்றது.

சம்மாந்துறை சமூக நல மேம்பாட்டு ஒன்றியத்தின் தலைவர் ஐ.எல். நாஸர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதீதியாக கொழும்பு நீர்வழங்கல் திட்டத்தின் திட்டப்பணிப்பாளர் எஸ்.அப்துல் றசீட் கலந்துகொண்டு நீர்வழங்கல் பத்திரங்களை பயனாளிகளுக்கு வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் அமைப்பின் செயலாளர் ரீ.எல்.அன்வர் உட்பட் பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X