Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூன் 17 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஜே.எம்.ஹனீபா
பாடசாலைகளிலுள்ள வளப்; பற்றாக்குறையும் வறுமையும் கல்விக்கு ஒருபோதும் தடையாக அமையாது. இந்த கஷ்டங்களை அனுபவித்து கல்வியை தொடர்கின்ற பிரதேசங்களிலேயே கல்வியின் அடைவுமட்டம் உயர்ந்துள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறைத்தொகுதி அமைப்பாளரும் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.
சம்மாந்துறை சென்னல் சாஹிறா மகா வித்தியாலயத்தில் இன்று (17) நடைபெற்ற முப்பெரும் விழாவில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'அரசாங்கம் இன்று கல்விக்காக கூடுதல் நிதியை ஒதுக்குகின்றது. இது மாணவர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். எமது நாட்டில் இலவசக்கல்வி அமுல்படுத்தப்படுகின்றது. எனினும், பாடசாலைகளிலுள்ள சில வளப் பற்றாக்குறைகளை வைத்துக்கொண்டு கல்வியை பின்னோக்கான நிலைக்கு இட்டுச்செல்வது பொருத்தமற்றதாகும்.
இன்று சம்மாந்துறைப் பிரதேசத்தில் ஆசிரியப் பற்றாக்குறை நிவர்த்திக்கப்பட்டுள்ளது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
6 hours ago
7 hours ago