Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூன் 19 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
அம்பாறை, பொத்துவில் பிரதேசத்துக்கான விஜயத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாளை சனிக்கிழமை (20) காலை 10 மணிக்கு மேற்கொள்ளவுள்ளார்.
இங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி, பொத்துவில் ஜலால்தீன் சதுக்கத்துக்கு அருகாமையில் புதிதாக அமைக்கப்பட்ட முகுது மகா விகாரையை திறந்து வைக்கவுள்ளார்.
சுமார் 60 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இவ்விகாரைக்கான அடிக்கல்லினை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நட்டு வைக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி வருகை தரும் இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான தயாகமகே, நாடாளுமன்ற உறுப்பினர் பி.தயாரத்தின மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு பொத்துவில் பிரதேசதமெங்கும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
13 minute ago
22 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
22 minute ago
40 minute ago