2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

சேவை நலன் பாராட்டு விழா

Thipaan   / 2015 ஜூன் 20 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எம்.எஸ்.எம். ஹனீபா

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.முகம்மட் இஸ்மாயிலின் ஆறு வருட சேவை நிறைவினையொட்டிய சேவை நலன் பாராட்டு விழா பல்கலைக்கழக நூலக முன்றலில் வெள்ளிக்கிழமை (19) மாலை நடைபெற்றது.

பல்கலைக்கழக சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த சேவை நலன் பாராட்டு விழாவில், உபவேந்தரின் சேவைக்காலத்தின் போது மேற்கொள்ளப்பட்ட முக்கிய விடயங்கள் தொடர்டபான உரை பொறியியல் பீடத்தின் பீடாதிபதியினால்    நிகழ்தப்பட்டது.

இந்த நிகழ்வில் சர்வேதச மாணவர் அமைப்பு மற்றும் பல்கலைக்கழக சமூகத்தினால் உபவேந்தரின் சேவையைப் பாராட்டும் முகமாக நினைவுப் பரிசில் வழங்கி கௌரவம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பதிவாளர் எச்.ஏ.சத்தார், உதவிப் பதிவாளர் மன்சூர் ஏ.காதர் மற்றும் பீடாதிபதிகள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .