2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கஞ்சாவுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூலை 12 , மு.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் இருவரை அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில்  சனிக்கிழமை (11)  இரவு  கைதுசெய்ததுடன், அவர்களிடமிருந்து கஞ்சாவை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை, கல்முனைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நற்பிட்டிமுனை பொது விளையாட்டு மைதானத்தில் எட்டு கிராம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை கைதுசெய்ததாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் கிடைத்த தகவலை தொடர்ந்து குறித்த  மைதானத்தை சுற்றிவளைத்து சந்தேக நபரை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இவ்வாறிருக்க மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவெடிவேம்பில் 10 கிராம் கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.  தெருவில் சென்ற இந்த சந்தேக நபரை மறித்து சோதனையிட்டபோதே, இவரிடம் கஞ்சா இருப்பது தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

மாவெடிவேம்புப் பிரதேசத்தில் அநாதரவாகக் கிடந்த 100 கிராம் கொண்ட கஞ்சா பொதியையும்  சனிக்கிழமை (11) ஏறாவூர் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .