2025 ஜூன் 26, வியாழக்கிழமை

தெஹியத்தகண்டியிலுள்ள வீடொன்றில் திருட்டு

Suganthini Ratnam   / 2015 ஜூலை 12 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

அம்பாறை, தெஹியத்தகண்டி பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து  120,000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருட்டுப்போனதை தொடர்ந்து, சந்தேகத்தின் அடிப்படையில் 25 வயதுடைய  ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (12) கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன், சந்தேக நபரிடமிருந்து திருட்டுப்போன  பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
வீட்டை பூட்டி விட்டு சனிக்கிழமை (11) இரவு வெளியில் சென்ற வேளையில், பிறிதொரு சாவியைக் கொண்டு   வீட்டைத் திறந்து பொருட்களை திருடியதாக  அவ்வீட்டிலுள்ளவர் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று  பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .