Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Princiya Dixci / 2015 ஜூலை 12 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா
மஹிந்த குடும்பமா? அல்லது நாடும், நாட்டு மக்களுமா? என்பதனை எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும் என முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.எல்.கலீல் தெரிவித்தார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு, அட்டாளைச்சேனை லொயிட்ஸ் ஹோட்டலில் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டையும் நாட்டு மக்களையும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பெரும் தியாகத்துடனும் விட்டுக்கொடுப்புடனும் செயற்பட்டு ஆட்சி மாற்றமொன்றை ஏற்படுத்தித் தந்துள்ளார்.
இந்த ஆட்சி மாற்றத்தின் அர்தத்தை வீண்போகச் செய்யாமல் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியை வெற்றி பெறச் செய்வதற்கு அனைவரும் உழைக்க வேண்டும் என்றார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சிறுபான்மைக்கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தே போட்டியிடவுள்ளமை நல்லதொரு முடிவாகவேவுள்ளது.
இன்று மு.கா. வேட்பாளர்களை நிறுத்துவதில் பாரிய சவாலையும் சிக்கலையும் தோற்றுவித்துள்ளது. எவ்வாறான அச்சுறுத்தல், சவால்கள் வந்த போதிலும் அதனை எதிர்கொண்டு மு.கா. தலைமை சிறந்த முடிவொன்றை எடுக்கும் என்ற நம்பிக்கை போராளிகள் மத்தியிலுள்ளன.
மேலும், அட்டாளைச்சேனைக்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்குவது தொடர்பில் தலைமைத்துவம் ஒரு போதும் வாக்குறுதி வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
56 minute ago
1 hours ago