2025 ஜூன் 26, வியாழக்கிழமை

சிறுமி துஷ்பிரயோகம்: சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Sudharshini   / 2015 ஜூலை 12 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, வி.சுகிர்தகுமார்

அம்பாறை, பொத்துவில் குண்டுமடு பகுதியில் 10 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 33 வயதுடைய சந்தேக நபரை, எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.பயாஸ் றஸாக உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் செய்த முறைப்பாட்டிற்கு அமைய, சந்தேக நபரை பொத்துவில் பொலிஸார் சனிக்கிழமை (11) கைது செய்து நீதிபதியின் முன்னிலையில் ஆஜர்ப்படத்தினர். இதன்போதே நீதிபதி மேற்கண்டவாறு உத்தவிட்டுள்ளார்.

குறித்த சிறுமி அயல் வீட்டுக்கு விளையாடச் சென்றிருந்த போது, வீட்டு உரிமையாளரான மேற்படி சந்தேக நபர், சிறுமியை துஷ்பிரயோகத்து உட்படுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .