2025 ஜூன் 26, வியாழக்கிழமை

உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

Sudharshini   / 2015 ஜூலை 14 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

கடந்த கால யுத்தத்தினாலும் இயற்கை அனர்த்தங்களினாலும் பாதிக்கப்பட்டு அம்பாறை பாலமுனை ஹூஸைனியா நகர் மற்றும் சின்னப்பாலமுனை ஆகிய கிராமங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

சின்னப்பாலமுனை சீட்ஸ் சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டின் கீழ், சீட்ஸ் அமைப்பின் தலைவரும் பிரதி அதிபருமான பி. முஹாஜிரின் தலைமையில் திங்கட்கிழமை (13) சின்னப்பாலமுனை பாலர் பாடசாலை மண்டபத்தில் இந்த உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இதன்போது, தெரிவுசெய்யப்பட்ட 100 பயனாளிகளுக்கு 3,500 ரூபாய் பெறுமதியான அரிசி, சீனி, பால்மா, கருவாடு போன்ற உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்தின் வெளிக்கள பரிசோதகர் எஸ்.எம். இப்றாஹிம், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா, இஸ்லாமிக் ரிலீப் நிறுவனத்தின் பிரதி நிதிகள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் எஸ்.எச். தம்ஜித், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். ஹைதர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .