Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2015 ஜூலை 16 , மு.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
அம்பாறை மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் பத்து வருடங்களுக்கும் மேலாக சுகாதாரத் தொண்டர்களாகவும் சிற்றூழியர்களாகவும் பணியாற்றிவருகின்ற தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு முன்பாக நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் திங்கட்கிழமை (13) நடைபெறவிருந்த நிலையில், அன்றையதினம் வேட்புமனுத் தாக்கல் இறுதித் தினமாகையால் பிற்போடப்பட்டு நேற்றையதினம் (15) நடைபெற்றது.
அம்பாறை மாவட்டத்தில் தெஹியத்த கண்டிய தொடக்கம் அம்பாறை, கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று, பொத்துவில் வைத்தியசாலைகளில் சுமார் 140 சுகாதார சிற்றூழியர்கள் பத்து வருடங்களுக்கும் மேலாக கொடுப்பனவு இல்லாமல் தொண்டர்களாக பணியாற்றிவருவதாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும். நிரந்தர நியமனம் தொடர்பில் சாதகமான பதில் கிடைக்கும்வரை போராட்டம் முன்னெடுக்கப்படுமென்றும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago