2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

விபத்தில் ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 16 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார், ரீ.கே.றஹ்மத்துல்லா,எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தில்  புதன்கிழமை (15) மாலை உழவு இயந்திரம் சைக்கிளில் சென்றவர் மீது மோதியதால் சின்னப்பனங்காடு பிரதேசத்தை இ.பத்மன் (வயது 58) மரணமடைந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.   

சாகாமம் பிரதேசத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கி நெல் மூடைகளுடன் சென்றுகொண்டிருந்த உழவு இயந்திரம்,  வீதியின் அருகில் சைக்கிளில்  சென்றவர் மீது படவே அவர் சடுதியாக கீழே விழுந்துள்ளார். விழுந்தவர் மீது உழவு இயந்திர பெட்டியின் பின்பகுதி சில்லு ஏறியதால்  சைக்கிளில்  சென்றவர் படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோதும் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தை தொடர்ந்து  உழவு இயந்திரத்தின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X