2025 ஜூன் 26, வியாழக்கிழமை

அனுமதிப்பத்திரமின்றி ஆற்று மணல் ஏற்றியவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2015 ஜூலை 16 , பி.ப. 01:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அனுமதிப்பத்திரமின்றி ஆற்று மணல் ஏற்றிய நபருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீல், புதன்கிழமை (15) 50,000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். 

ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த நபருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுவில், கழி ஓடை ஆற்றை   அண்டிய பகுதியில் சட்டவிரோதமாக ஆற்றுமணல் அகழ்வில் ஈடுபட்டு வருவது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .