2025 ஜூன் 25, புதன்கிழமை

பால்மாவை திருடிய ஐவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூலை 17 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

பால்மா வகைகளை  திருடி  விற்பனை  செய்துவந்ததாகக் கூறப்படும் ஐந்து பேரை கல்முனைப் பிரதேசத்தில் புதன்கிழமை (15) கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை மாவட்டத்துக்கான  பால்மா விநியோகஸ்தர் ஒருவரின் நிறுவனத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்று  உடைக்கப்பட்டு, அதிலிருந்து சுமார் 100,000 ரூபாய்; பெறுமதியதான பால்மாவைக் கொண்ட பெட்டிகள் கடந்த  செவ்வாய்க்கிழமை (14) திருடப்பட்டுள்ளதாக கல்முனைப் பொலிஸில் அவ்விநியோகஸ்தர் முறைப்பாடு செய்திருந்தார்.
இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு திருடப்பட்ட பால்மா பெட்டிகளையும் முச்சக்கரவண்டியொன்றையும்  கைப்பற்றியதுடன், சந்தேக நபர்களையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இந்த சந்தேக நபர்கள்;  தொடர்ச்சியாக திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்துள்ளதாகவும் திருடப்படும் பொருட்களை  வர்த்தக நிலையம்; ஒன்றில் விற்பனை செய்துவந்துள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .