2025 ஜூன் 25, புதன்கிழமை

பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கியர்களுக்கு விளக்கமறியல்

Princiya Dixci   / 2015 ஜூலை 19 , மு.ப. 10:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன் 

பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கிய மூவரை அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி அகீலா, நேற்று சனிக்கிழமை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அட்டாளைச்சேனை பிரதான வீதியில் நேற்று   (18) அக்கரைப்பற்று பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த மூவரை நிறுத்துமாறு சைகைகாட்டிய போதும் நிறுத்தாமல் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, மோட்டார் சைக்கிளை பின் தொடர்ந்து சென்ற பொலிஸார் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி விசாரணை செய்ய முற்பட்ட போது குறித்த மூவரும் பொலிஸார் உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்  நடத்தியுள்ளனர். 

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகஸ்தர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .